Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேட்ட வரங்கள் தரும் கோட்டை ... சமூக சேவைக்கு பிரசித்தி பெற்ற ஷரவு மஹா கணபதி கோவில் சமூக சேவைக்கு பிரசித்தி பெற்ற ஷரவு ...
முதல் பக்கம் » துளிகள்
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நோட்டு, புத்தகங்கள் வைத்து பூஜை
எழுத்தின் அளவு:
லட்சுமி  ஹயக்ரீவர் கோவிலில் நோட்டு, புத்தகங்கள் வைத்து பூஜை

பதிவு செய்த நாள்

12 மார்
2025
01:03

மக்கள் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும் நிலையில், மன அழுத்தத்தில் இருந்து மக்களை விடுபட வைக்கும் ஒரு கோவிலும் இங்கு அமைந்துள்ளது. காந்திநகரில் உள்ளது ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவில். கடந்த 1938ம் ஆண்டு பரகல மடத்தை சேர்ந்த ஸ்ரீ அபிநவ ரங்கநாதர் என்ற மடாதிபதி, இந்த கோவிலை நிறுவினார். ஹயக்ரீவர், விஷ்ணுவின் அவதாரம்; அவர் மனித உடலும், குதிரை தலையும் கொண்ட அறிவு, ஞானத்தின் கடவுளாக வணங்கப்படுகிறார். இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்தால் கல்வி, செல்வம், வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஹயக்ரீவரை தரிசனம் செய்தால் மன அழுத்தத்தில் இருந்தும் விடுபடலாம் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். கோவிலில் உள்ள விக்ரஹம், நான்கு தாமரை கைகளை கொண்டுள்ளது. ஒன்று அறிவையும், மற்றொன்று ஞானத்தையும் போதிக்கும். மற்ற இரண்டு கைகளில் சங்கும், சக்கரமும் உள்ளன. தங்கள் பிள்ளைகள் பரீட்சைக்கு செல்லும் முன், பெற்றோர் இங்கு வந்து பேனா, நோட்டு, புத்தகங்கள் வைத்து பூஜை செய்து செல்கின்றனர். கடவுளுக்கு பூஜை செய்ய பயன்படுத்தப்படும் தேனை பக்தர்களுக்கு அர்ச்சகர்கள் வழங்குகின்றனர். சரஸ்வதி மற்றும் ஹயக்ரீவரின் மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் 48 நாட்கள் வெறும் வயிற்றில் தேனை சாப்பிட்டால், மாணவர்களுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்வுக்கு செல்லும் மாணவர்களும் இங்கு வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் இக்கோவிலில் மாணவர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும்; மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
பூங்கா நகர் பெங்களூரில், புராதன கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. பல்வேறு கோவில்கள் பக்தர்களை பரவசத்துடன் ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் ஏராளமான பழங்கால, புராண வரலாறுகள் கொண்ட கோவில்கள் ... மேலும்
 
temple news
பெங்களூரு, கே.ஆர்., புரம் மார்க்கெட் அருகில் உள்ளது மலை கோட்டை ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமணா கோவில். பெங்களூரு ... மேலும்
 
temple news
தமிழகம் போன்று கர்நாடகாவிலும் அதிகளவில் கோவில்கள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி ... மேலும்
 
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷம். ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar