Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் மாசித் தெப்ப ... புதுக்கோட்டை அய்யனார் கோவிலில் ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலை அமைப்பு புதுக்கோட்டை அய்யனார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலத்தில் மாசி மகம்; முன்னோர்களுக்கு திதி கொடுக்க குவிந்த மக்கள்
எழுத்தின் அளவு:
 விருத்தாசலத்தில் மாசி மகம்; முன்னோர்களுக்கு திதி கொடுக்க குவிந்த மக்கள்

பதிவு செய்த நாள்

12 மார்
2025
05:03

விருத்தாசலம்; விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவத்தையொட்டி, முன்னோர்களுக்கு திதி கொடுக்க லட்சக்கணக்கானோர் மணிமுக்தாற்றில் குவிந்தனர்.


விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக பிரம்மோற்சவம், கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முக்கிய நிகழ்வாக, இன்று மாசி மக உற்சவம் விமர்சையாக நடந்தது. ‘காசியை விட வீசம் பெருசு, விருத்தகாசி’ என்ற ஆன்மிக பெயருடைய விருத்தாசலம் மணிமுக்தாற்றில் நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்து வேண்டினால், காசிக்கு சென்று வந்த புண்ணியத்தை விட பல மடங்கு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் நள்ளிரவு 1:00 மணி முதல், மணிமுக்தாற்றில் நீராடி, பச்சரிசி, அகத்திக்கீரை, வெல்லம், எள் உட்பட பல்வேறு காய்கறிகளை தானமாக வழங்கி, திதி கொடுத்தனர். பின், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வசதிக்காக பாலக்கரை, கடைவீதி ரவுண்டானா மற்றும் வேப்பூர், பெண்ணாடம் மார்க்கத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு, புறவழிச்சாலையில் திருப்பி விடப்பட்டது. ஆங்காங்கே குடிநீர், நீர்மோர், பானகம், உணவு ஆகியவை பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன. டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி வழிதவறிய சிறுவனை போலீசார் மீட்டு, அவரது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கும்பாபிஷேக யாகசாலை இரண்டாம் கால பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சோளிங்கர்; யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம், இன்று ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில்திருபவித்ரோத்சவ விழாவை ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் குருபூர்ணிமா விழா நடந்தது. அதனை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar