Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுக்கோட்டை அய்யனார் கோவிலில் ... 100 ஆண்டுகளுக்கு பின் நாமக்கல் கமலாலய குளத்தில் தெப்ப திருவிழா கோலாகலம் 100 ஆண்டுகளுக்கு பின் நாமக்கல் கமலாலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாட்டரசன்கோட்டையில் மாசி தேரோட்டம்; கொட்டும் மழையில் பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
நாட்டரசன்கோட்டையில் மாசி தேரோட்டம்; கொட்டும் மழையில் பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

12 மார்
2025
06:03

சிவகங்கை; நாட்டரசன்கோட்டை சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயிலில் மாசி மக திருவிழா தேரோட்டம் நடந்தது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் மாசி மக திருவிழா மார்ச் 4 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை பிரியாவிடையுடன் கரிகாலசோழீஸ்வரர் உலா வந்தார். விழாவின் ஒன்பதாம் நாளான இன்று அதிகாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் பிரியாவிடையுடன் கரிகாலசோழீஸ்வரர், சிவகாமி அம்மன், விநாயகர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.


இன்று காலை 10:40 மணிக்கு அனைத்து பக்தர்களும் தேர் வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி, காலை 11:10 மணிக்கு நிலையை அடைந்தது. முன்னதாக தேர் புறப்படும் போது தேர் சக்கரத்தில் சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டனர். பக்தர்கள் ஒன்றாக கொட்டும் மழைக்கு இடையே ஆர்வமுடன் தேரை இழுத்து சென்றனர். பத்தாம் நாளான நாளை காலை 10:30 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், யாகசாலை தீபாராதனை, கலச அபிஷேகம், மூலவர் தீபாராதனை நடைபெறும். இரவு 7:15 மணிக்கு சுவாமி புறப்பாடுடன் கொடிஇறக்கப்பட்டு மாசி திருவிழா நிறைவு பெறும். தேவஸ்தான கண்காணிப்பாளர் எஸ்.கணபதிராமன், கவுரவ கண்காணிப்பாளர் கருப்பையா உட்பட விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். 


லட்சார்ச்சனை பூஜை: சிவகங்கை: சிவகங்கை அருகே வாணியங்குடி அன்னை வீரமாகாளியம்மன் கோயிலில் மாசி மக தினத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை நடந்தது. இன்று காலை கணபதி, லட்சுமி, துர்கா, சுதர்சன, நவகிரக, மூலமந்திர ஜப ேஹாமம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு லட்சார்ச்சனை பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிராம மக்கள் ஏற்பாட்டை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கும்பாபிஷேக யாகசாலை இரண்டாம் கால பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சோளிங்கர்; யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம், இன்று ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில்திருபவித்ரோத்சவ விழாவை ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் குருபூர்ணிமா விழா நடந்தது. அதனை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar