Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரெணபலி முருகன் கோயில் மாசி உற்ஸவ ... பெண்களின் சபரிமலை; ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா கோலாகலம் பெண்களின் சபரிமலை; ஆற்றுக்கால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரம்பரிய வழிபாடு; மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்த இருளர் பழங்குடியின மக்கள்
எழுத்தின் அளவு:
பாரம்பரிய வழிபாடு; மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்த இருளர் பழங்குடியின மக்கள்

பதிவு செய்த நாள்

13 மார்
2025
01:03

மாமல்லபுரம்; இருளர் பழங்குடியினர், பாரம்பரிய குலதெய்வ வழிபாட்டிற்காக, மாமல்லபுரம் கடற்கரையில் முகாமிட்டு உள்ளனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட பகுதிகளில், இருளர் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர்.

நம்பிக்கை; பாம்பு பிடிப்பது, மூலிகை மருந்து தயாரிப்பது, விறகு சேகரிப்பது உள்ளிட்டவை இவர்களின் பாரம்பரிய தொழில். தற்காலத்தில் செங்கல் சூளை, அரிசி ஆலை உள்ளிட்டவற்றில், கூலித் தொழிலாளர்களாகவும் உள்ளனர். இவர்கள், தங்களின் குலதெய்வமான கன்னியம்மன், வங்க கடலில் வீற்றுள்ளதாக நம்புகின்றனர். எனவே, ஆண்டுதோறும் மாசி மகம் நாளில், மாமல்லபுரம் கடற்கரையில் கன்னியம்மனை வழிபடுவர். இதற்காக சில நாட்களுக்கு முன்பே குடும்பத்தினர், உறவினருடன், மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் கூடுவர். கடற்கரையில் திறந்தவெளியில் சிறு குடில்கள் அமைத்து முகாமிட்டு, மாசிமக நாளில் தங்களின் குலதெய்வமான கன்னியம்மனை வழிபடுவர். மேலும், திருமணம் நிச்சயம் செய்யப்பட்டவர்களுக்கு, தங்களின் பாரம்பரிய சடங்குகள் நடத்தி, திருமணம் செய்வர். குழந்தைகளுக்கு முடி நீக்கி, காது குத்துவர். பிற வேண்டுதல்களையும் இங்கேயே நிறைவேற்றுவர்.அந்த வகையில், மாசி மகமான நாளை, பாரம்பரிய வழிபாட்டிற்காக, தற்போது இருளர்கள் மாமல்லபுரம் கடற்கரையில் முகாமிட்டு உள்ளனர்.

அடிப்படை வசதிகள்; இவர்களுக்காக நகராட்சி நிர்வாகம், தற்காலிக குடிநீர், கழிப்பறை ஆகிய வசதிகளை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் முகாமிடும் காலத்தில் மழை பெய்யாமல், இயல்பு வானிலை நிலவும். கடந்த இரண்டு நாட்களாக, அவ்வப்போது மழை பெய்யும் நிலையில், திறந்தவெளியில் தங்கியுள்ள அவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். முன்னதாக, திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பல ஜோடியினர், வழக்கத்திற்கு மாறாக, நேற்று காலையே வழிபாட்டு சடங்குகளை நடத்தி, திருமணம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar