Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் அய்யப்பன் கோவிலில் ஏகதச ... தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பிடி மண் நிகழ்ச்சி தாயமங்கலம் முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்காக ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்காக ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

17 மார்
2025
01:03

திருப்பூர்; ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு வழிபாட்டில், நான்காவது வாரமான நேற்று, பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் 800க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் நலன் வேண்டி, திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில், ஆண்டுதோறும் சிறப்பு யாக பூஜை மற்றும் வழிபாடு நடத்தப்படுகிறது. அதன்படி, 11ம் ஆண்டு ஹயக்ரீவர் வழிபாடு, கடந்த மாதம், 23ல் துவங்கி, நேற்று வரை, நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, சிறப்பு வேள்வி, காலை, 10:30 மணிக்கு, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் திருமஞ்சனம், நாம சங்கீர்த்தனம், 11:30 மணிக்கு சாற்றுமறை, மகாதீபாராதனை ஆகியன இடம்பெற்றன. பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் நலன் வேண்டி, பொது வழிபாடு நடந்தது. மாணவர் பெயர் மற்றும் நட்சத்திர பெயரில், சிறப்பு அர்ச்சனை செய்து, பிரசாதம் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் கையில் கட்டும் ரக்ைஷ மற்றும் வழிபாட்டு கையேடு வழங்கப்பட்டது. நான்காவது வார வழிபாடு நேற்று நடந்தது. எண்ணுாறுக்கும் அதிகமான மாணவ, மாணவியர் பங்கேற்று, பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்; அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த, நான்கு ஞாயிற்றுக்கிழமை நடந்த ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாட்டில், 2,500க்கும் அதிகமானோர் பங்கேற்று, வழிபாடு நடத்தியுள்ளனர். நேற்றுடன், வழிபாடு நிறைவு பெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar