Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... இன்று தேய்பிறை பஞ்சமி; வளமான வாழ்விற்கு வாராகியை வழிபடுங்க..! இன்று தேய்பிறை பஞ்சமி; வளமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

19 மார்
2025
10:03

அரூர்; அரூர் அருகே, தீர்த்தமலை  தீர்த்தகிரீஸ்வரர்  மாசிமக தேரோட்டம் நேற்று, விமர்சையாக நடந்தது. தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்ட விழா கடந்த, 11ல், விநாயகர் பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 12ல், கொடியேற்றமும், 16ல், சுவாமி திருக்கல்யாணமும் நடந்தது. விழாவின், முக்கிய நிகழ்வான மாசிமக தேரோட்டம் நேற்று, விமர்சையாக நடந்தது. கோவில் முன், அலங்கரித்து நிறுத்தியிருந்த விநாயகர், தீர்த்தகிரீஸ்வரர், வடிவாம்பிகை ஆகிய, மூன்று தேர்கள் மீது, முத்துக்கொட்டை, பொறி, மிளகு, உப்பு மற்றும் நவதானியங்களை துாவி, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.மதியம், 2:15 மணிக்கு, பக்தர்கள் முதலாவதாக அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தேரை வடம் பிடித்தனர். தொடர்ந்து,  விநாயகர் தேர் நிலையை அடைந்ததும், தீர்த்தகிரீஸ்வரர் தேர் புறப்பாடு நடந்தது.  அதற்கடுத்து, வடிவாம்பிகை தேரை பக்தர்கள் வடம் பிடித்தனர்.


விழாவில், அரூர், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., சம்பத்குமார், தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமோகன், நிர்வாகிகள் தென்னரசு, கிருஷ்ணமூர்த்தி மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. விழாவையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, அரூர் கிளை சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்ட விழாவிற்கு வந்த பக்தர்கள் கூட்டத்தால், அரூர் – தீர்த்தமலை சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று காலை கிரிவலப் பாதையில் ... மேலும்
 
temple news
தேய்பிறை பஞ்சமி வாராகி அம்மனை வழிபட உகந்த நாளாகும். பஞ்சமி திதியில் தான் வாராகி அம்மன் அவதரித்தார். ... மேலும்
 
temple news
திருப்பூர்; பங்குனி மாத சுவாதி நட்சத்திர நாளான நேற்று, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் புகழ்பெற்ற அருள்மிகு காரைக்கால் அம்மையார் ஐக்கிய தினம் முன்னிட்டு காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று வெகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar