புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2025 03:03
பாலக்காடு; புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழாவிற்கு இன்று கொடியேறின. கேரள மாநிலம் பாலக்காடு நகரின் அருகே உள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். இக்கோவிலில் எல்லா ஆண்டும் பங்குனி மாதம் "கூத்தபிஷேகம் -தாலப்பொலி என்ற பெயரில் திருவிழா நடப்பது பழக்கம். நடப்பாண்டு திருவிழாவிற்கு இன்று கொடியேறியது. காலை சிறப்பு பூஜைகளுக்கு பின் 8:45 மணியளவில் தந்திரி அண்டலாடி உண்ணி நம்பூதிரிப்பாடின் தலைமையில் கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து கலசாபிஷேகம், பிரஹ்ம கலசாபிஷேகம் ஆகியவை நடந்தன. 10:30 மணிக்கு அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வு நடந்தது. ஸ்ரீபுரம் தாந்திரீக ஆய்வு மைய தலைவர் கிரிஷ்குமாரின் ஆன்மீக சிறப்புரை நடந்தது. திருவிழாவை முன்னிட்டு மார்ச் 30 முதல் ஏப். 6ம் தேதி வரை நடன சங்கீத உற்சவம் நடக்கிறது. ஏப். 11ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது.