ராமேஸ்வரம் கோயில் வீதியில் பந்தல்:பக்தர்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2025 11:03
ராமேஸ்வரம்; -ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கிழக்கு ரதவீதியில் தற்காலிக பந்தல் அமைத்ததால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ராமேஸ்வரம் பாம்பன் உள்ளிட்ட தீவு பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து, வெப்ப சலனம் நிலவுகிறது. இதனால் ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் சுட்டெரித்த வெயிலால் ரதவீதியில் நடந்து செல்வதற்கு சிரமப்பட்டனர். பக்தர்களை பாதுகாக்க கோயில் வீதியில் பந்தல் அமைக்க ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தினர். அதன்படி ராமேஸ்வரம் நகராட்சி கோயில் கிழக்கு ரதவீதியில் 200மீ., நீளத்தில் நிழல் தரும் பந்தல் அமைத்தனர். இதனால் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு வரும் பக்தர்கள், கோயிலில் இருந்து வரும் பக்தர்கள், தற்காலிக பந்தலில் சிறிது நேரம் நின்று இளைப்பாறி மகிழ்ந்தனர். இதுபோல் கோயில் வடக்கு, தெற்கு ரதவீதியில் அமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.