கொட்டாம்பட்டி வடக்குப்புற காளியம்மன் கோயில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2025 11:03
கொட்டாம்பட்டி; கொட்டாம்பட்டி வடக்குப்புற காளியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் பொய் சொல்லா மெய் அய்யனார் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் 4 கி.மீ., நடந்து சென்று கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். பிறகு பூத்தட்டு ஊர்வலம் நடந்தது. இத் திருவிழாவில் கொட்டாம்பட்டி ஒன்றிய பகுதியைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.