வல்லக்கோட்டை முருகனுக்கு பாலாபிஷேகம்; ரத்தினங்கி சேவையில் சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2025 05:03
ஸ்ரீபெரும்புதுார்; ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஏழு அடி உயரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் இன்றுஅதிகாலை 5:00 மணிக்கு, முருகனுக்கு கோ பூஜையும், 5:30 மணிக்கு பாலாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, மூலவர் மலர் அலங்காரத்திலும், உற்சவர் ரந்தினங்கி சேவை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவில் நிர்வாகம் சார்பில், பொங்கல், மோர் உள்ளிட்டவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. ஏற்படுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றம் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.