Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்மையகரம் ஆதிபராசக்தி கோவிலில் ... நெல்லை சிதம்பர நகரில் ஹயக்ரீவருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலில் அறிவிப்பு பலகை: இணை கமிஷனர் நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2012
11:12

தஞ்சாவூர்: அறிநிலைத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள தஞ்சை ராஜவிநாயகர் கோவிலில் அறநிலைத்துறையினரால் அறிவிப்பு பலவை வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை கரந்தை ராஜவிநாயகர் கோவில், "அறநிலைத்துறையின்கீழ் கோவில் நிர்வாகம் கொண்டு வரப்பட்டு, தக்கார் நியமித்தும், அதன் ஆண்டு வருவாயை முறைப்படுத்துவதில் அதிகாரிகள் மெத்தனப்÷பாக்கை கடைப்பிடிப்பதால் பல லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது என, கடந்த நவ., மாதம், 30ம் தேதி "காலைக்கதிர் நாளிதழில், "முறைப்படுத்தப்படாத கோவில் வருவாய்? என, தலைப்பில், செய்தி வெளியானது.தஞ்சை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் இளங்கோ உத்தரவு பிறப்பித்த பின்னரும், தஞ்சை கரந்தை ராஜவிநாயகர் கோவில் அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவதில் மெத்தன போக்கு கடைபிடிக்கப்பட்டது. அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் தான் கோவில் உள்ளது என்பதை பக்தர்கள், கடைக்காரர்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில், கோவில் வாசலில் அறிவிப்பு பலகையை வைக்க அறநிலைத்துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, "காலைக்கதிர் செய்தியில் வலியுறுத்தப்பட்டது.அப்போது தஞ்சை மண்டல இணை கமிஷனர் இளங்கோ கூறுகையில், "தஞ்சை, கரந்தை ராஜவிநாயகர் கோவிலில் பொறுப்பேற்றுள்ள தக்கார் மூலம் கடை வாடகை, வருவாய் ஆகியவற்றை முறைப்படுத்த, ஒரு மாதம் கால அவகாசம் ஆகும். கோவிலுக்கு சொந்தமான கடை வாடகை நிர்ணயம் சரியானதா? என முறைப்படுத்திய பின்னரே, வருவாயை முறைப்படி அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வரப்படும். கோவிலில் அறிவிப்பு பலகை வைக்கப்படும் என, விளக்கம் அளித்திருந்தார்.இந்நிலையில், ராஜவிநாயகர் கோவில் முகப்பில், அறநிலைத்துறை பிளக்ஸ் போர்டு வைத்துள்ளது. போர்டில், " ராஜவிநாயகர் கோவில், தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஆளுகைக்குட்பட்டது ஆகும். நன்கொடைகள், காணிக்கைகள் இதர இனங்கள் இத்திருக்கோவிலுக்கு செலுத்த விரும்புவோர், கீழ்க்கண்ட முகவரியில் செலுத்தி, அச்சு ரஷீது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என, செயல் அலுவலர் பெயரில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது."காலைக்கதிர் செய்தி எதிரொலியாக, தஞ்சை மண்டல இணை கமிஷனர் இளங்கோ நடவடிக்கையின்பேரில், கோவிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டாலும், நிரந்தரமாக பெயிண்ட் பலகை வைக்காமல், ப்ளக்ஸ் போர்டு வைத்துள்ளது, ஏதோ, பெயரளவுக்கு எடுக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கையோ? என, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆகையால் நிரந்தரமாக பெயிண்ட் பலகை வைக்க, இதன்பின்னராவது அறநிலையத்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar