Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி ... ஆங்காரகாளி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேரோட்டம் ஆங்காரகாளி அங்காள பரமேஸ்வரி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

29 மார்
2025
02:03

ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடந்தது. இதில் பல ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.


இக்கோயிலில் மார்ச் 18 அன்று கொடியேற்றத்துடன் பூக்குழி திருவிழா துவங்கியது. தினமும் காலை அம்மன் மண்டகப்படி எழுந்தருளலும், இரவு வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலாவும் நடந்தது. முக்கிய நிகழ்வான பக்தர்கள் பூக்குழி திருவிழா இன்று விமர்சையாக நடந்தது. இதனை முன்னிட்டு அமாவாசை நாளான இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கோயிலில் காப்பு கட்டி பெரிய மாரியம்மன், பட்டத்தரசி அம்மன், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள், பழனி ஆண்டவர் உட்பட பல்வேறு கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து ரத வீதி சுற்றி வந்தனர். மதியம் 12:50 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வீதியுலா துவங்கியது. இதனையடுத்து ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் பக்தர்கள் தீ மிதிக்க துவங்கினர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி மதுரை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கொளுத்தும் வெயிலையும், கொதிக்கும் அனலையும் தாங்கி தீமிதித்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜோதிலட்சுமி தலைமையில் அறநிலையத்துறையினர் செய்திருந்தனர். டி.எஸ்.பி. ராஜா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று (மார்ச் 30) காலை 11:00 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் வருகிற ஏப்., 4ல் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 75ம் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவிற்காக நாளை நடை ... மேலும்
 
temple news
விழுப்புரம்; பிரம்மதேசம் அருகே முன்னுார் ஆடவல்லீஸ்வரர் கோவிலில் பல்லவர் கால அரிய சிற்பங்கள் மற்றும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar