Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி அமாவாசை; சமயபுரம் ... பங்குனி அமாவாசை; பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு பங்குனி அமாவாசை; பேரூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 4ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 4ம் தேதி கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

29 மார்
2025
05:03

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும், 4ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்கிறது.


முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த 2013ம் ஆண்டு, கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதால், கடந்த, ஜனவரி 20ம் தேதி, பாலாலயம் செய்யப்பட்டு, கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள், இன்றுடன் நிறைவு பெறவுள்ளது. இதனையடுத்து, வரும் ஏப்., 1ம் தேதி, காலை, 8:45 மணிக்கு, மங்கள இசை, திருமுறை பாராயணம், சாந்தி ஹோமம், திசா ஹோமம், புனித மண் எடுத்தல், புனித நீர் எடுத்தல், புனித அனல் எடுத்தல் நடக்கிறது. மாலை, 4:35 மணிக்கு மேல், எண் வகை மருந்து சாத்துதல், முளைப்பாலிகை இடுதல், கங்கணம் கட்டுதல், முதல் கால யாக பூஜையும்; ஏப்., 2ம் தேதி காலை, இரண்டாம் கால யாக பூஜையும், மூன்றாம் காலையாக பூஜையும்; 3ம் தேதி, காலை, நான்காம் கால யாக பூஜையும், மாலை, 5ம் கால யாக பூஜையும் நடக்கிறது. ஏப்ரல் 4ம் தேதி, காலை, 4:30 மணிக்கு, ஆறாம் கால யாக பூஜையும், காலை 6:00 மணி முதல் 6:45 மணிக்குள், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும்; காலை, 8:30 மணிக்கு, மருதாச்சலம் மூர்த்தி விமானம், ஆதிமூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்களுக்கு, கும்பாபிஷேகமும்; காலை, 9:05 மணிக்கு, ஆதிமூலவர், விநாயகர், மருதாசலமூர்த்தி, பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜ பெருமாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு, மஹா கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. தொடர்ந்து மாலை, 5:30 மணிக்கு, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar