Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ... திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவக்கம் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பங்குனி கிருத்திகை விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பங்குனி கிருத்திகை விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

01 ஏப்
2025
05:04

திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி பெருமான் கோவிலில், பங்குனி கிருத்திகை விழா, நேற்று விமரிசையாக நடைபெற்றது. திருப்போரூர் கந்தசுவாமி பெருமாள் கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் நேற்றும், பங்குனி மாத கிருத்திகை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று காலை 3:00 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. முருகருக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையுடனும், நிதி ஆண்டு மற்றும் மாதம் முதல் நாளுடனும் கிருத்திகை வந்ததால், சுவாமியை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். பக்தர்களில் பலர் காவடி எடுத்தும், வேல் குத்தியும், மொட்டை அடித்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். அதேபோல், வட்ட மண்டப தொட்டியில் உப்பு, மிளகு பிராத்தனையாக செலுத்தினர். ஆடு, சேவலை பிராத்தனையாக கோவிலுக்கு விட்டனர். சிதறு தேங்காய் உடைத்தனர். முருகர் உருவ பொம்மைகளை, உண்டியல்களில் போட்டனர். மேலும், நேற்று புதிய நிதியாண்டிற்கான கணக்கு எழுதுதல் தொடக்க நாளாக இருந்ததால் பிரார்த்தனையாக, வியாபாரிகள், கல்வி, தொழில் நிறுவத்தினர்கள் தங்கள் நோட்டுப் புத்தகம், எழுது பொருட்களை வைத்து வழிபட்டனர். மாலையில், கந்தசுவாமி பெருமான் வள்ளி – தெய்வானையுடன், சிறப்பு அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளிலும் திருவீதிவுலா சென்று அருள்பாலித்தார். கோவில் வளாகம், மாடவீதிகள் என, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு, பரணி உற்சவத்தில் கந்தபெருமான் சிறப்பு அலங்காரத்தில் மயில் வாகனத்தில், மாடவீதி உலா வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாசி திருவிழா, மாரியம்மன் கோயிலில் கம்பத்தில் தீச்சட்டி வைக்கப்பட்டதை முன்னிட்டு பக்தர்கள் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar