Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ... கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் தூக்க திருவிழா; 1175 குழந்தைகளுக்கு தூக்க நேர்த்திக்கடன் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

01 ஏப்
2025
05:04

திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக சுவாமி நெல்லையப்பர் ஆயிரங்கால் மண்டபம் எழுந்துருளி பாண்டிய மன்னருக்கு செங்கோல் வழங்கும் விழா பங்குனி உத்திர திருநாள் அன்று நடைபெறும். திருவிழாவின் இரண்டாம் நாள் தொடங்கி ஒன்பதாம் நாள் வரை சுவாமி நெல்லையப்பர் கருவறையில் வைத்து பூஜை செய்யப்படும். உடையவர் மூர்த்திலிங்கம் மாலை வேலைகளில் உற்சவர் மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆண்டுக்கு 8 நாள் மட்டுமே இந்த லிங்கம் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்படும்.இத்தகைய பிரசித்தி பெற்ற நிகழ்வுகள் நடக்கும் இத்திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இந்த நிகழ்வுக்காக கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து கொடிபட்டம் கோவில் உட்பிரகாரத்தில் விதி உலாவாக கொண்டுவரப்பட்டு சுவாமி சன்னதி முன்பு உள்ள சின்ன தங்க கொடிமரத்தின் முன் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டு திருவிழா கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பால் மஞ்சள் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை அபிஷேக திரவியம் கொண்டு சிறப்பாக அபிஷேகமும் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் விழா வரும் பத்தாம் தேதி கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
 புவனகிரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புவனகிரியில், ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாசி திருவிழா, மாரியம்மன் கோயிலில் கம்பத்தில் தீச்சட்டி வைக்கப்பட்டதை முன்னிட்டு பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar