Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ... பங்குனி உத்திர திருவிழா, சித்திரை விஷுவுக்காக சபரிமலை நடை திறப்பு பங்குனி உத்திர திருவிழா, சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் தூக்க திருவிழா; 1175 குழந்தைகளுக்கு தூக்க நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் தூக்க திருவிழா; 1175 குழந்தைகளுக்கு தூக்க நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

01 ஏப்
2025
05:04

நாகர்கோவில்; கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் இன்று 1175 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


கன்னியாகுமரி - கேரள எல்லையான கொல்லங்கோட்டில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பத்ரகாளி அம்மன் கோயில். இங்கு நடைபெறும் தூக்கத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. குழந்தை வரம் வேண்டியும் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வாழ வேண்டியும், இந்த நேர்த்திக்கடன் இங்கு நடத்தப்படுகிறது. 45 அடி உயரம் கொண்ட இரண்டு தூக்க மரத்தின் மேல் முனையில் கட்டப்பட்டுள்ள நான்கு தூக்கவில்லில் குழந்தைகளை ஏந்தி செல்லும் தூக்க காரர்கள் துணிகளால் இடுப்பில் கட்டப்படுவர். பின்னர் இவர்களின் கையில் நேர்ச்சை குழந்தைகள் கொடுக்கப்படுவார்கள். இதைத்தொடர்ந்து தூக்க மரம் 20 அடி உயரத்தில் எழும்பிய பின்னர் தேர் போன்ற தூக்க வண்டியை பக்தர்கள் இழுத்து கோயிலை ஒருமுறை வலம் வரும்போது நான்கு குழந்தைகளின் தூக்க நேர்ச்சை நிறைவேறும். இந்த ஆண்டு1175 குழந்தைகள் முன்பதிவு செய்து இருந்தனர். இதற்காக 294 முறை இந்த தூக்க வேண்டி கோயிலை வலம் வந்தது. குழந்தைகளை இரண்டு கைகளிலும் தாங்கிய படி தொங்குகின்ற தூக்கக்காரர்கள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே தேர்வு செய்யப்படுகின்றனர்.


இன்று காலை 6:30 மணி முதல் தூக்க வண்டி ஓடத் தொடங்கியது. நாளை அதிகாலை வரை தூக்கவேண்டி கோயிலை வலம் வந்து தூக்க நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படும். தூக்கத் திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதியில் இருந்து கொல்லங்கோட்டுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தூக்கம் நிறைவு பெற்றதும் ஆராட்டுடன் விழா நாளை நிறைவு பெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar