Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 19 ஆண்டுகளுக்கு பின் தென்காசி காசி ... சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சவுந்தரவல்லி தாயாருக்கு லட்சார்ச்சனை விழா சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
‘ஆரூரா... தியாகேசா’ கோஷங்கள் முழங்க திருவாரூர் ஆழி தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
‘ஆரூரா... தியாகேசா’ கோஷங்கள் முழங்க திருவாரூர் ஆழி தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

07 ஏப்
2025
10:04

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் ஆழித் தேரோட்டம், நேற்று, ‘ஆருரா ... தியாகேசா’ கோஷங்கள் முழங்க கோலாகலமாக நடந்தது.

திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் வரலாற்று சிறப்புமிக்கது; மிகவும் பழமை வாய்ந்தது. ‘ இக்கோவில் தோன்றிய காலத்தை கூறமுடியாத அளவு பெருமை பெற்றது’ என, திருநாவுக்கரசர் பாடியுள்ளார். இக்கோவிலுக்கு பெருமை சேர்ப்பது ஆழித்தேர். இத்தேர், ஆசியாவிலேயே மிகப்பெரியது.தேரின் உயரம் 96 அடி; எடை 350 டன். முன்புறம் தேரை இழுப்பதுபோல்  நான்கு குதிரை சிலைகள் உள்ளன.

ஒவ்வொரு குதிரையும்,26 அடி நீளம், 11 அடி உயரம்  உடையவை. இவை, தமிழர்களின் கலைநயத்தை  பறைசாற்றும் விதமாகவும், நான்கு வேதங்களை குறிப்பிடும் வகையிலும் அமைந்துள்ளன. தேரை இழுக்கும் வடத்தின் நீளம், 425 அடி, சுற்றளவு, 21 அங்குலம் ஆகும். திருச்சி பெல் நிறுவனம், ஆழித்தேரை நவீனமாக்கி, ைஹட்ராலிக் பிரேக் அமைத்துள்ளது.   

கடந்த மாதம், 13ம் தேதி பங்குனி உத்திரவிழா துவங்கியதையடுத்து, 15ம் தேதி, கொடியேற்று விழா நடந்தது. ஆழித்தேரோட்டத்தை ஒட்டி, நேற்றுமுன்தினம்  இரவு, 10:45 மணிக்கு, ஆழித்தேருக்கு தியாகராஜசுவாமி எழுந்தருளினார்.சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு,விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டம் நடந்தது. காலை 9:10 மணிக்கு, ஆயில்ய நட்சத்திரத்தில்,  கலெக்டர் மோகனச்சந்திரன், எஸ்.பி.,கருண்கரட், எம்.எல்.ஏ., கலைவாணன், பா.ஜ.,மூத்ததலைவர் எச்.ராஜா ஆகியோர் வடம் பிடித்து,ஆழித்தேரோட்டத்தை துவக்கிவைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘ஆரூரா... தியாகேசா’  கோஷங்கள் முழங்க வடம்பிடித்து தேரை இழுத்தனர்.  

ஆடி அசைந்து புறப்பட்ட ஆழித்தேர், பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆழித்தேருக்குபின், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் இழுக்கப்பட்டன. கீழ ரதவீதியில் கிளம்பிய ஆழித்தேர் இரவு நிலையை அடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில்  கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.வடக்கே காசி ... மேலும்
 
temple news
 லக்னோ; ராம நவமியான நேற்று, அயோத்தி ராமர் கோவிலில் உள்ள குழந்தை ராமர் சிலை மீது சூரியக் கதிர்கள் பட்டு ... மேலும்
 
temple news
 சிருங்கேரி,; சிருங்கேரி சாரதா பீடாதிபதி பாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகளின் 75வது ஜன்மதின விழா சமீபத்தில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் 3ம் நாளான நேற்று சுவாமி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடையில் சீரமைக்கப்பட்ட, ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம், 9ம் தேதி நடைபெற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar