சேர்த்தி சேவை முடிந்து உரையூரிலிருந்து திரும்பிய ஸ்ரீரங்கம் நம்பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2025 11:04
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் விழாவில் நம்பெருமாள், கமலவல்லி தாயார் சேர்த்தி சேவை முடிந்து உரையூரிலிருந்து திரும்புகால் சேவை இன்று அதிகாலை நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் 6ம் நாளான நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தங்கப் பல்லக்கில் புறப்பட்டு, காவேரியை கடந்து உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலுக்கு முற்பகல் வந்தடைந்தார். அங்கு சேர்த்தி மண்டபத்தில் பிற்பகல் முதல் நள்ளிரவு வரை கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை சாதித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாள் வழிபட்டனர். தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார். சேர்த்தி சேவை முடிந்து உரையூரிலிருந்து திரும்புகால் சேவை இன்று அதிகாலை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வரும் 12ம் தேதி நடைபெறுகிறது.