தொடர் விடுமுறை : ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2025 06:04
ராமேஸ்வரம்; தொடர் விடுமுறை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று முதல் ஏப்., 14 வரை தொடர் விடுமுறையால் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள். பின் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் நீண்ட தூரம் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் தனுஷ்கோடி அர்ச்சல்முனையில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி இன்றி சாலை இருபுறமும் நிறுத்தி வாகனங்களால் போக்குவரத்து பாதித்து, சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.