Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழ் புத்தாண்டு; சித்திரை விஷு கனி ... சுவாமிமலை முருகன் கோவிலில் 60 தமிழ் ஆண்டுகளின் பெயர் கொண்ட 60 படிக்கட்டுகளில் பூஜை சுவாமிமலை முருகன் கோவிலில் 60 தமிழ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டியில் தமிழ் புத்தாண்டு தீர்த்தவாரி ; அஸ்திரத் தேவர், அங்குசத் தேவருக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டியில் தமிழ் புத்தாண்டு தீர்த்தவாரி ;  அஸ்திரத் தேவர், அங்குசத் தேவருக்கு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

14 ஏப்
2025
03:04

திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு அஸ்திரத்தேவருக்கும், அங்குசத்தேவருக்கும் தீர்த்தவாரி நடந்தது.

நகரத்தார் கோயிலான கற்பக விநாயகர் கோயிலில் விசுவாவசு தமிழ்ப்புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறந்து திருவனந்தல் பூஜைகள் நடந்தன. பின்னர் மூலவர் தங்கக் கவசத்திலும், உற்ஸவர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்கள் தரிசித்தனர். பின்னர்  காலை 9:20 மணிக்கு வெள்ளிப்பல்லக்கில் அங்குசத்தேவரும், அஸ்திரத்தேவரும் கோயிலிலிருந்து புறப்பாடாகி கோயில் குளப்படித்துறையில் எழுந்தருளினர். தொடர்ந்து தலைமைக்குருக்கள் பிச்சைசிவாச்சார்யர் உள்ளிட்ட சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்களுடன் பூஜைகள் நடத்தினர். சோமசுந்தரம் குருக்களால் அஸ்திரத்தேவருக்கும், அங்குசத்தேவருக்கும் திரவியங்களால் அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.  தொடர்ந்து ஸ்ரீதர் குருக்கள் கோயில் குளத்தில் சிவனின் பிரதிநிதியான அஸ்திரத் தேவருக்கும், விநாயகரின் பிரதிநிதியான அங்குசத்தேவருக்கும் மும்முறை தீர்த்தத்தில் மூழ்கி தீர்த்தவாரி நடத்தினார். தீபாராதனை நடந்து  கோயில் புறப்பாடாகியது. குளத்தைச் சுற்றி நின்று பக்தர்கள் தீர்த்தவாரியை தரிசித்தனர். மதியம் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இரவு மூலவர் கற்பகவிநாயகர்,மருதீசர் சன்னதி முன்பாக, ராசி விதான மண்டலத்தின் கீழ் சிவாச்சார்யரால் விசுவாவசு ஆண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர்,அம்பாள், மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி பிரகாரம் வலம் வந்தனர். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி சித.பழனியப்பன்,நச்சாந்துபட்டி மு.குமரப்பன் ஆகியோர் செய்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருச்சி; திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.உலகப் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் சனீஸ்வர பகவான் கோவிலில் வரும் 2026ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி சனி பெயர்ச்சி ... மேலும்
 
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், மூலவர் கந்த சுவாமி சுயம்பு மூர்த்தியாக ... மேலும்
 
temple news
ஊட்டி; ஊட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar