தேய்பிறை பஞ்சமி; வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2025 11:04
கோவை; கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஞான ஈஸ்வரி அம்பாள் உடனுறை ஸ்ரீ ஞான ஈஸ்வரர் கோவிலில் சித்திரை தேய்பிறை பஞ்சமி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.