சாரம் நாகமுத்துமாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2025 10:04
புதுச்சேரி; சாரம் நாகமுத்துமாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேக விழா நேற்று நடந்தது. சாரம் முத்து விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி, நாகமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி மாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை, 7:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நாக முத்து மாரியம்மனுக்கு கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பொன் நீலகண்டன் செய்திருந்தார்.