விழுப்புரம்; விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப மகோற்சவ விழா விடையாற்றி உற்சவம் நடந்தது. விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில், லட்சதீப மகோற்சவ விழா கடந்த 10ம் தேதி துவங்கியது. அன்று முதல் தினந்தோறும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. கடந்த 14ம் தேதி லட்சதீப விழா மற்றும் 19ம் தேதி தெப்பல் உற்சவம் நடந்தது. இதையடுத்து, நேற்று விடையாற்றி உற்சவம் நடந்தது. ராமர், லட்சுமணன், சீதா மற்றும் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் மற்றும் இரவு சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.