Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கையில் நடராஜருக்கு 16 வகை ... திருக்காட்டுப்பள்ளி கோலவில்லிராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் திருக்காட்டுப்பள்ளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தண்டுமாரியம்மன் கோவில் திருக்கல்யாணம்; குலவை ஒலி எழுப்பி பக்தர்கள் கோலாகலம்
எழுத்தின் அளவு:
தண்டுமாரியம்மன் கோவில் திருக்கல்யாணம்; குலவை ஒலி எழுப்பி பக்தர்கள் கோலாகலம்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2025
11:04

கோவை,; கோவையின் குலதெய்வமாக போற்றப்படும் தண்டுமாரியம்மனுக்கு, நேற்று மாலை பக்தர்கள் சூழ மங்கள வாத்தியங்கள் முழங்க, திருக்கல்யாண வைபவம் நடந்தது.

கோவை – அவிநாசி ரோடு மேம்பாலம் அருகே உள்ள தண்டுமாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா, 14ல் மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து கொடியேற்றம், பூச்சாட்டு, அக்னிச்சாட்டு, திருவிளக்கு வழிபாடு நடந்தது. அன்றாடம் யாகசாலை பூஜைகளை தொடர்ந்து ஒவ்வொரு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். நேற்று மாலை அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் பக்தர்கள் சூழ நடந்தது.முன்னதாக, கோவில் அரங்கில் பட்டாடை, ஆபரணங்கள் அணிவித்துசிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள்விக்கப்பட்டார்.

அக்னியை யாகசாலையில் எழுந்தருளச் செய்து, சிவாச்சாரியார்கள் கணபதியை துதித்து பாடல்களை பாடி வேத மந்திரங்களை பாராயணம் செய்தனர். மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல், பழங்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட சீர்வரிசையை பக்தர்கள் எடுத்து வந்து அம்மனுக்கு சமர்ப்பித்தனர். மங்கள வாத்தியங்கள் பக்தர்களின் குலவை ஓசையுடன் யாகசாலையில் வைக்கப்பட்டு, பூஜிக்கப்பட்ட மாங்கல்ய சரடை சிவாச்சாரியார்கள் எடுத்து அம்மனுக்கு அணிவித்தனர். தொடர்ந்து உரலில் சுன்னம் இடித்தல், மாலை மாற்றுதல், தேங்காய் உருட்டுதல், மொய்ப்பணம் சமர்பித்தல், விருந்து பரிமாறுதல் உள்ளிட்ட வைபவங்கள் நடந்தது. பாரம்பரியமும் கலாச்சாரமும் மாறாமல் திருமணவைபவம் பக்தர்கள் சூழ விமரிசையாகநடந்தது. அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. நல்வாழ்வு வேண்டி பக்தர்கள் அம்மனை வழிபட்டனர், அனைவருக்கும் மங்கலபொருட்கள் வழங்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar