Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வில்லியனுார் பெருமாள் கோவிலில் ... நத்தம் ராஜகாளியம்மன் கோயில் திருவிழா; அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நத்தம் ராஜகாளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொளசூர் அக்ரஹாரம் குளோபல் டவுன்ஷிப் ஸ்ரீ மகா பெரியவா நகர் துவக்க விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
மொளசூர் அக்ரஹாரம் குளோபல் டவுன்ஷிப் ஸ்ரீ மகா பெரியவா நகர் துவக்க விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

26 ஏப்
2025
01:04

திண்டிவனம்; திண்டிவனம் அருகே மொளசூரில் அமைந்துள்ள ஸ்ரீ அக்ரஹாரம் குளோபல் டவுன்ஷிப் – ஸ்ரீ மகா பெரியவா நகர் துவக்க விழா நேற்று நடந்தது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்–புதுச்சேரி ரோட்டில் உள்ளது மொளசூர் கிராமம். இங்குள்ள திண்டிவனம் ஆர்.டி.ஒ., அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ளது ஸ்ரீ அக்ரஹாரம் குளோபல் டவுன்ஷிப் – ஸ்ரீ மகாபெரியவா நகர். மொளசூர் புண்ணிய சேஷத்திர அக்ரஹாரத்தில், நேற்று காலை துவக்க விழா நடந்தது. இதையொட்டி ஸ்ரீனிவாச பெருமாளுக்கு 108 கலச பூஜை, மகா விஷ்ணு ஹோமம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 7 மணிக்கு மகா சங்கல்பமும், தொடர்ந்து கோபூஜை, புண்ணியாகவாசனம், நாமசங்கீர்த்தனம், வேதபாராயணம், அக்னி பிரதிஷ்டை, மகா விஷ்ணு ஹோமம் நடந்தது. அதை தொடர்ந்து மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. துவக்க விழாவில், புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சக்தி குரூப்ஸ் எம்.டி.,பார்த்தீபன், ஸ்ரீஅக்ரஹாரம் குரூப்ஸ் எம்.டி., ஆலங்குடி எஸ்.வி.ஆர்.வி., கீர்த்திவாசன் ஐயர், சக்தி குரூப்ஸ் ஈஸ்வரன், ஆர்.ஐ.பி.இ.,கன்சல்ட்டிங் முதன்மை அதிகாரி டாக்டர் ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஸ்ரீஅக்ரஹாரம் குளோபல் டவுன்ஷிப் – ஸ்ரீ மகாபெரியவா நகரில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஸ்ரீதேவி பூதேவி பூமிதேவி சமேத சீனுவாச பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதில் பெருமாள் தாயாருக்கு வஸ்திரம் ஓதி கொடுத்தல், உபசாரங்கள் திருமாங்கல்ய பூஜை, திருமாங்கல்ய தாரணம் விசேஷ அர்ச்னை தீபாராதனை நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஸ்ரீ அக்ரஹாரம் குரூப்ஸ் எம்.டி., ஆலங்குடி எஸ்.வி.ஆர்.வி., கீர்த்திவாசன்ஐயர் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நிழல் கிரகங்களான ராகு, கேதுவுக்கு உருவம் கிடையாது. சூரியன், சந்திரனின் சுற்றுப்பாதையில் இவர்கள் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் சித்திரைத்தேர் உத்ஸவம் இன்று நடைபெற்றது. கோவிந்தா ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி ஜங்ஷன் கெட்வெல் ஆஞ்சநேயர் கோவிலில் இன்று சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில்ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோத்சவம் 10 ... மேலும்
 
temple news
வானுார்; இரும்பை மகா காளேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. அதனையொட்டி நேற்று மாலை மூலவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar