Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தியாகராஜ சுவாமி ஜெயந்தி விழா ... அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தயாராகும் வாகனங்கள் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை ஏழுமலையான் கோவிலில் ‘பிரேக்’ தரிசன நேரம் மாற்றம்
எழுத்தின் அளவு:
திருமலை ஏழுமலையான் கோவிலில் ‘பிரேக்’ தரிசன நேரம் மாற்றம்

பதிவு செய்த நாள்

02 மே
2025
11:05

சென்னை; திருமலை ஏழுமலையான் கோவிலில், ‘பிரேக்’ தரிசன நேரம் சோதனை அடிப்படையில், நேற்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தரிசன பரிந்துரை கடிதங்கள், இரண்டரை மாதங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், அதிகாலை முதல் பல்வேறு தரிசன சேவைகள் உள்ளன. இதில், ‘பிரேக்’ தரிசனம் ஒரு சிறப்பு தரிசன முறை. இது, வி.ஐ.பி., பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. இதற்கான டிக்கெட்டை, ‘ஆன்-லைன்’ வழியாகவும் நேரிலும் பெறலாம். இந்த தரிசனத்தில் ஆரத்தி, தீர்த்தம், சடாரி சேவைகளுக்கு அனுமதிக்கப்படுகிறது. ஆந்திராவில் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற பின், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், அனைவருக்கும் தரிசனம் என்ற அடிப்படையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருமலை ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்களின் கூட்டத்தை கவனத்தில் கொண்டு, நேற்று முதல் ஜூன், 15 வரை தரிசனம் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், வி.ஐ.பி., பிரேக் தரிசன நேரத்திலும் நேற்று முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, ‘புரோட்டோகால்’ உள்ள நீதிபதிகள், மந்திரிகள் உள்ளிட்ட உயர் பதவி வகிக்கும் வி.ஐ.பி.,க்கள் அதிகாலை, 5:45 மணிக்கும், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் காலை, 6:30 மணிக்கும், பொது, ‘பிரேக்’ தரிசனம் செல்பவர்கள் காலை 6:45 மணிக்கும் அனுமதிக்கப்படுவர். அதேபோல, ஸ்ரீவாணி தரிசன நேரமும், காலை, 10:15 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. நன்கொடையாளர்கள் காலை, 10:30 மணிக்கும், திருமலை திருப்பதி தேவஸ்தான ஓய்வு பெற்ற ஊழியர்களை கவுரவித்து காலை, 11:00 மணிக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வழக்கமாக செல்லும் தரிசனத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, திருப்பதி தேவஸ்தானம் புதிய நடைமுறையை நேற்று முதல் செயல்படுத்தி உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம், இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சி சங்கரமடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில்,  ராமானுஜர் ஜெயந்தி விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருஇந்தளூர் தான்தோன்றீஸ்வரர் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar