Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சியில் மதுரகவி ஆழ்வார் வைணவ சபை ... பேரூரில் பிராமணர் சங்கத்தின் சமஷ்டி உபநயனம் பேரூரில் பிராமணர் சங்கத்தின் சமஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
32 ஆண்டுகளுக்குப் பிறகு அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா
எழுத்தின் அளவு:
32 ஆண்டுகளுக்குப் பிறகு அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா

பதிவு செய்த நாள்

05 மே
2025
11:05

காரைக்குடி; காரைக்குடி அருகே உள்ள புலிகுத்தியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில், புரவி எடுப்பு விழா 32 ஆண்டுகளுக்குப் பிறகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.


காரைக்குடி அருகேயுள்ள புலிக்குத்தி கண்மாய் அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புரவி எடுப்பு விழா நடைபெறும். புலிக்குத்தி, கல்லுவயல், பொட்டவயல் ஆகிய 3 கிராமங்கள் சார்பில், மழை பெய்திடவும், விவசாயம் செழித்திடவும் நடைபெறும் இத்திருவிழா கடந்த 32 ஆண்டுகளாக நடைபெறவில்லை. 32 ஆண்டுகளுக்குப் பிறகு, 3 கிராமம் சார்பில் இத்திருவிழா நடைபெறுகிறது. இதற்காக கடந்த மாதம் குதிரை செய்வதற்கு பிடிமண் வழங்கப்பட்டது. சூளைப் பொட்டலில் குதிரை செய்யும் பணி நடந்தது. 6 காளை, 1யானை, 31 குதிரை என மொத்தம் 38 புரவிகள் தயாரானது. தொடர்ந்து சூளைப் பொட்டலில் இருந்து கூத்து பொட்டலுக்கு குதிரைகள் கொண்டு செல்லப்பட்ட. அங்கு சமபந்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலுக்கு புரவிகள் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் கிராம மக்கள், நேர்த்திக்கடனாக பிள்ளை உருவம், பாம்பு, கன்றுக்குட்டி உள்ளிட்ட பல்வேறு சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். 32 ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய முறைப்படி நடந்த திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar