கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2025 01:05
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா துவங்கி நடந்து வருகிறது. கடந்த 29ம் தேதி கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சாகை வார்த்தலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து பல்வேறு வழிபாடுகள் நடந்தன. நேற்று இரவு சுவாமி திருக்கண் திறக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று ( 13ம் தேதி) இரவு சுவாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது திருநங்கைகள், பக்தர்கள் தாலி வாங்கி கொண்டு கோவிலுக்குள் சென்று வழிப்பட்டு பூசாரி கைகளால் திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் (தாலி கட்டுதல்) நிகழ்ச்சி நடந்தது. இரவு முழுதும் திருநங்கையர் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த வந்த ஏராளமான திருநங்கையர் மற்றும் பக்தர்கள் அங்கு குவிந்திருந்தனர். இன்று காலை, 6:30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை பந்தலடி பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் நிகழ்ச்சியும், 15ம் தேதி விடையாத்தி, 16ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.