பதிவு செய்த நாள்
16
மே
2025
07:05
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ. 71 லட்சத்தை காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் கடந்த ஒரு மாதத்திற்கான உண்டியல் வசூல் எண்ணும் பணி நேற்று காலை 9 மணிக்கு துவங்கி நேற்று இரவு 7 மணிவரை நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், துணை ஆணையர் சிவலிங்கம். அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், சேவார்த்திகள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.71 லட்சத்து 9 ஆயிரத்து 289 ரூபாய் ரொக்கமும், 170 கிராம் தங்கம், 605 கிராம் வெள்ளி நகைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். ஆய்வாளர் சங்கீதா, அறங்காவலர்கள் சுரேஷ், ஏழுமலை,பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மேலாளர் மணி ஆகியோர் உடன் இருந்தனர்.