பதிவு செய்த நாள்
18
மே
2025
01:05
வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்ளாவூர் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், ஒருகால பூஜை தொடர்ந்து நடைபெறுகிறது.
விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்குதல் நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், பராமரிப்பின்மை காரணமாக, பல ஆண்டுகளுக்கு முன், இக்கோவில் மண்டபத்தின்முன் பகுதி கட்டடம் இடிந்தது. தற்போது இக்கோவில்கட்டடம் பழுதடைந்து நாளுக்கு நாள் பலவீனமாகி வருகிறது. கோவிலின்கோபுர பகுதியை சுற்றி உள்ள சுவாமி உருவ படங்கள் சிதிலமடைந்து, கான்கிரீட் பெயர்ந்துஉள்ளது.
மண்டபத்திற்குள் மழைநீர் சொட்டுவதோடு,மண்டபம் மற்றும்கோபுரம் மீது செடி, கொடிகள் வளர்ந்துஉள்ளன. இக்கோவிலை புனர மைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, கோவில் அறங்காவல் குழுதலைவர் வேதாச்சலம் கூறியதாவது, உள்ளாவூர் பெருமாள் கோவிலை புனரமைப்பு பணி செய்து, குடமுழுக்கு விழா மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், பழமை யான கோவில்கள் கணக்கெடுத்து ஆண்டுக்கு 1,000 கோவில்கள் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த கோவிலையும் சீர்படுத்த வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் கோவில் நிர்வாக அதிகாரிகளிடத்திலும் மனு அளித்துள்ளோம். மனுவை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர். இவ்வாறு அவர்கூறினார்.