Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news இளையனார்வேலுார் முருகனுக்கு ... சோளிங்கரில் குவிந்த பக்தர்கள் சோளிங்கரில் குவிந்த பக்தர்கள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உள்ளாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
உள்ளாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க கோரிக்கை

பதிவு செய்த நாள்

18 மே
2025
01:05

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்ளாவூர் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், ஒருகால பூஜை தொடர்ந்து நடைபெறுகிறது.

விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்குதல் நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், பராமரிப்பின்மை காரணமாக, பல ஆண்டுகளுக்கு முன், இக்கோவில் மண்டபத்தின்முன் பகுதி கட்டடம் இடிந்தது. தற்போது இக்கோவில்கட்டடம் பழுதடைந்து நாளுக்கு நாள் பலவீனமாகி வருகிறது. கோவிலின்கோபுர பகுதியை சுற்றி உள்ள சுவாமி உருவ படங்கள் சிதிலமடைந்து, கான்கிரீட் பெயர்ந்துஉள்ளது.

மண்டபத்திற்குள் மழைநீர் சொட்டுவதோடு,மண்டபம் மற்றும்கோபுரம் மீது செடி, கொடிகள் வளர்ந்துஉள்ளன. இக்கோவிலை புனர மைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, கோவில் அறங்காவல் குழுதலைவர் வேதாச்சலம் கூறியதாவது, உள்ளாவூர் பெருமாள் கோவிலை புனரமைப்பு பணி செய்து, குடமுழுக்கு விழா மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், பழமை யான கோவில்கள் கணக்கெடுத்து ஆண்டுக்கு 1,000 கோவில்கள் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த கோவிலையும் சீர்படுத்த வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் கோவில் நிர்வாக அதிகாரிகளிடத்திலும் மனு அளித்துள்ளோம். மனுவை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர். இவ்வாறு அவர்கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, அமராவதி ஆற்றங்கரையில், குமரலிங்கம், கல்லாபுரம் பகுதியில், ... மேலும்
 
temple news
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் பல்வேறு நிலைகளில் விநாயகர் அருள்பாலித்து கொண்டிருக்க, ... மேலும்
 
temple news
மீஞ்சூர்: வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூர் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்சவம், ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி – கன்னிகாபுரம் மாநில நெடுஞ்சாலையில் சப்த கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த இளையனார்வேலுாரில் முருகன் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar