Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ... சென்னை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் வேடுபறி வைபவம் சென்னை கல்யாண வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ தீர்த்தவாரி; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2025
02:05

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவின் தொடர்ச்சியாக இன்று தீர்த்தவாரி நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.


Default Image
Next News

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோத்சவம் கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், பிரபல உத்சவங்களான கடந்த 13ம் தேதி கருடசேவை உத்சவமும், 17ம் தேதி தேரோட்டமும் கோலாகலமாக நடந்தது. பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாள் உற்சவமான இன்று காலை ஆள்மேல் பல்லக்கில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்தார். வீதியுலா முடிந்ததும், நுாற்றுகால் மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார். அங்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின் மண்டபத்தில் இருந்து, சின்ன பெருமாள் என அழைக்கப்படும் ப்ரணதார்த்தி ஹர வரதர், கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் புஷ்கரணி குளத்தில் எழுந்தருளினார். அங்கு, பிற்பகல் 12:30 மணிக்கு தீர்த்தவாரி உத்சவம் நடந்தது. தீர்த்தவாரி உத்சவம் முடிந்ததும் குளத்திற்குள் பாதுகாப்புக்காக கயிறு கட்டப்பட்டு இருந்த பகுதிக்குள் மட்டும் பக்தர்கள் நீராட போலீசார் அனுமதித்தனர்.


இதில், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களின் கண்காணப்பில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடினர். பக்தர்களின் பாதுகாப்புக்காக கோவில் வளாகம், குளக்கரை மற்றும் குளத்திற்குள் என 300க்கும் மேற்பட்ட போலீசாரும், ஊர்காவல் படையினரும், தீயணைப்பு மீட்புபணி வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குளத்திற்குள் பொது மக்கள் இறங்காமல் தடுக்கும் வகையில் கயிறு கட்டப்பட்டிருந்தது. தீயணைப்பு மற்றும் போலீசார் சார்பில், மூன்று பைபர் படகுகள் பாதுகாப்புக்காக குளத்திற்குள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தன. பிரம்மோத்சத்தின், 10ம் நாள் உத்சவமான நாளை காலை, த்வாதச ஆராதனமும், இரவு வெட்டிபேர் சப்பரத்துடன் வைகாசி பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar