திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் திருவாசகம் முற்றோதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2025 10:05
திருப்பூர்; திருப்பூர் மாணிக்கவாசகர் மன்றம் சார்பில், திருவாசகம் முற்றோதல் நேற்று, விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நடந்தது. திருப்பூர் மாணிக்கவாசகர் மன்றம் மற்றும் அர்த்தசாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம் சார்பில், திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மாதத்தின் 3 வது திங்கட்கிழமை திருவாசகம் முற்றோதல் நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று சிறப்பு வழிபாட்டுடன், திருவாசக முற்றோதல், காலை, 8:00 மணிக்கு துவங்கியது. சிவனடியார்கள் கூட்டாக சேர்ந்து, கை தாளம் இசை மற்றும் பண்ணிசையுடன் பதிகங்களை பாராயணம் செய்தனர். நிறைவாக, மகாதீபாராதனை நடந்தது.