Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பராமரிப்பு இல்லாத பழையசீவரம் கோவில் ... காமாட்சியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம் காமாட்சியம்மன் கோயிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழவரம் வரமுக்தீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
சோழவரம் வரமுக்தீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

21 மே
2025
05:05

சோழவரம்; சோழவரம் அடுத்த புதிய எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், 2,000 ஆண்டுகள் பழமையான காமாட்சி அம்பாள் உடனுறை வரமுக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சிதிலமடைந்ததை தொடர்ந்து, கடந்த 2015ல் திருப்பணிகள் துவங்கப்பட்டன. இங்குள்ள பாலமுருகன், குபேர விநாயகர், தட்சணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகிய சன்னிதிகள் ஒவ்வொன்றாக புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் முடிந்தன. தற்போது, 54 லட்சம் ரூபாயில் ராஜகோபுரம் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது, நான்கு நிலைகளை கொண்ட, 165 அடி உயரம் உடையது. இதில், 216 சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. சிமென்ட் பயன்படுத்தாமல் சுண்ணாம்பு, கடுக்காய் உள்ளிட்டவைகளை கொண்டு, அதன் பழமை மாறாமல் புனரமைக்கப்படுகிறது. இந்தாண்டு இறுதிக்குள் ராஜகோபுர திருப்பணிகள் முடித்து, கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.


இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: இக்கோவில் மிகவும் சக்தி வாய்ந்த வாயு தலமாகும். இங்கு, சிவனும், பார்வதியும் திருமண கோலத்தில் இருப்பது கூடுதல் சிறப்பு. கருவறை தீபம் கமலதீபமாக காட்சியளிக்கிறது. சித்தர்கள் தவமிருந்த தலம் என, கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக கோவில் சிதிலமடைந்து, தற்போது திருப்பணிகள் நடக்கிறது. தற்போது, நிதி ஆதாரம் தான் பிரச்னையாக இருக்கிறது. பக்தர்கள் முன்வந்து திருப்பணிகளுக்கு உதவி செய்தால், விரைவாக பணிகளை முடித்துவிடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
அன்னூர்; மதுர காளியம்மன் கோவில் மண்டல பூஜை நேற்று நடந்தது.லக்கேபாளையம் கோவில் பாளையத்தில் 350 ஆண்டுகள் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் லட்சுமி நாராயண அஷ்டலஷ்மி கோவில் ஆதி பிரம்மனுக்கு அமாவாசை தாலாட்டு உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar