பள்ளிப்பட்டு; பள்ளிப்பட்டு பேருந்து நிலையம் அருகே கொள்ளாபுரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கோடையில் ஜாத்திரை திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இன்று நடந்த கொள்ளாபுரியம்மன் ஜாத்திரையில், திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அதை தொடர்ந்து, பள்ளிப்பட்டு நகரின் அனைத்து வீதிகள் வழியாகவும், கொள்ளாபுரியம்மன் வீதியுலா வந்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.