பதிவு செய்த நாள்
23
மே
2025
10:05
கன்னியாகுமரி; சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா, ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் திருக்கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும் வைகாசி இன்று (23ம் தேதி) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், காலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் திருக்கொடி ஏற்றப்பட்டது. விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி மற்றும் அய்யாவழி சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.