Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரப்பாடி காளியம்மன் கோவில் முதல் ... அவிநாசி காசி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம் அவிநாசி காசி விநாயகர் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடப்பட்டது
எழுத்தின் அளவு:
முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடப்பட்டது

பதிவு செய்த நாள்

23 மே
2025
12:05

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் இன்று (23ம் தேதி) யாகசாலை முகூர்த்தக்கால் நடப்பட்டது. 

முருகனின்  ஆறுபடை வீடுகளில் முதற் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2011ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 6-ந் தேதி பூசம் நட்சத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது  12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் திருக்கோயில் ஆகம விதிப்படி மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேக நடைபெற கோவில் நிர்வாகம் முன் வந்தது. அதன் தொடக்கமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாலயம் நடைபெற்றது. தொடர்ந்து வரும் ஜூலை 14ம் தேதி அதிகாலை 5 :25 மணி முதல் 6:10  மணிக்கள் மகா கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கும்பாபிஷேக நிகழ்ச்சியில் முதல் நிகழ்வாக யாகசாலை மண்டபம் அமைப்பதற்கான முகூர்த்த கால் நடும் விழா இன்று நடைபெற்றது. முன்னதாக கோவில் உற்சவர் மண்டபத்தில் முகூர்த்த காலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து முகூர்த்தகாலை சுமந்து கோவில் வளாகத்தை சுற்றி வந்து கோவில் கந்த சஷ்டி மண்டபம் அருகே யாகசாலை மண்டபம் அமையும் இடத்தில் நவதானியம் பால் ஊற்றப்பட்டு மேளதாளங்கள் முழங்க அரோகரா கோசத்துடன் முகூர்த்தக்கால் நடும் விழா விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து முகூர்த்த காலுக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. இதில் கோவில் அறங்காவலர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்ட பின்னர்  ஜூலை 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை காலையில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு 14ம் தேதி அதிகாலை மகா கும்பாபிஷேகம் நடத்தப்படும் என கோவில் நிர்வாகம் சார்பாக துணை ஆணையர் சூரிய நாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை xஅரங்கநாத ஸ்வாமி கோவிலில் வைகாசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று வைகாசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
அவிநாசி; காசி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அவிநாசி கிழக்கு ரத வீதியில் உள்ள ஸ்ரீ காசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar