பதிவு செய்த நாள்
23
மே
2025
04:05
கோவை; காரமடை xஅரங்கநாத ஸ்வாமி கோவிலில் வைகாசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் கால சந்தி பூஜை முடிந்து விஷ்வக்ஷேனர் பூஜை புண்ணியாவசனம், கலச ஆவாகனம், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாத உற்சவமூர்த்திகளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து, அரங்கநாதர் மஞ்சள் பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில், வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ, மேள தாளம் முழங்க திருக்கோவில் வலம் வந்து ஆஸ்தானம் சேர்ந்தார். அதனை தொடர்ந்து உச்சகால பூஜை, சாற்றுமறை, மகாதீப ஆராதனை நடந்தது. இந்த வைபவத்தில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராசு தாரர்கள், அறங்காவலர் குழுவினர், திருக்கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.