விருத்தாசலம்; விருத்தாசலம் கோவில்களில் கிருத்திகையொட்டி, முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர் மற்றும் குமரேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். மாலை 4:00 மணிக்கு மேல், சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை வெள்ளிக்கவசத்தில் சுவாமி அருள்பாலித்தார். கண்டியங்குப்பம் வெண்மலையப்பர், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர் கோவில்களிலும் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.