திருவாடானை; திருவாடானை அருகே அரசூரில் மாசாணி அம்மன் கோயில் திருவிழா இன்று துவங்கியது. முன்னதாக புதிய கொடிமரம் ஊர்வலமாக துாக்கி செல்லபட்டு கோயில் முன்பு அமைத்து காப்புகட்டுதல் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 15 ல் பூக்குழி விழா நடைபெறும். விழாவை முன்னிட்டு கோயில் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.