நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு பிரத்தியங்கராதேவிக்கு நிகும்பலா யாகம் நடந்தது. நடுவீரப்பட்டு பாதாளகாளி கோவிலில் உள்ள பிரத்தியங்கராதேவிக்கு வைகாசி மாத அமாவாசையொட்டி நேற்று மதியம் 1:00 மணிக்கு மண்டபத்தில் யாகவேள்விகள் துவங்கியது. 2:00 மணிக்கு யாகத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு நிகும்பலா யாகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.3:00 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளைய ஆலய நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார்.