காட்டூர் ஆதிபராசக்தி விளையாட்டு மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2025 10:05
கோவை; காட்டூர் செல்லப்பன் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிபராசக்தி விளையாட்டு மாரியம்மன் கோவில் 56 -ம் ஆண்டு உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வான திருவிளக்கு பூஜை நடந்தது. இந்த நிகழ்வில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.இந்த நிகழ்வின் போது அணி கூடை என்று அழைக்கப்படும் சக்தி கரகத்திற்கான அம்மன் முகம் மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடி, எலுமிச்சம்பழம் பூ ஆகியன அம்மன் முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.