ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் 101ம் ஆண்டு பொங்கல் விழா; கத்தி போடும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2025 02:05
காரைக்குடி; காரைக்குடியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் 101 வது பொங்கல் திருவிழாவையொட்டி இன்று கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது.
காரைக்குடி நா.புதூர் வீரையன் கண்மாய் அருகேயுள்ள ஒன்பது நாடு தேவாங்கர் மகாஜன சபைக்கு பாத்தியமான ராமலிங்க சவுடேஸ்வரி கோயிலின் 101 வது ஆண்டு பொங்கல் திருவிழா நடந்தது. கடந்த மே 20ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. இன்று காலை முத்தாலம்மன் கோயிலில் இருந்து சக்தி கரகம் புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக கரகம் ஊர்வலமாக சென்று கோயிலை வந்தடைந்தது. கரகத்தின் முன்பு பக்தர்கள் கத்திபோட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மகா அபிஷேகம், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து முளைப்பாரி திருவிழாவும், அம்மன் குதிரை வாகனத்தில் மின் ரதத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது.