Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி வெள்ளி; விளமல் பதஞ்சலி ... மரிக்குண்டு முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா மரிக்குண்டு முத்தாலம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் திருத்தேர் உற்சவம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் திருத்தேர் உற்சவம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்

பதிவு செய்த நாள்

30 மே
2025
05:05

செஞ்சி; சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நடந்த திருத்தேர் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.

செஞ்சி அடுத்த சிங்கவரம் மலை மீதுள்ள பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவில் 10 நாள் பிரம்மோற்சவம் கடந்த 24ம் தேதிகொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை சூர்ய பிரபை வாகனத்திலும், மாலை ஹம்சவாகனதில் சாமி வீதி உலா நடந்தது. 26ம் தேதி சிம்ம வாகனத்திலும், 26ம் தேதி அனுமந்த வாகனத்திலம், 27 ம் தேதி சேஷ வாகனத்திலும், 28 ம் தேதி கருட சேவையும், 29ம் தேதி யானை வாகனத்திலும் சாமி வீதி உலா நடந்தது. 7ம் நாள் விழாவாக இன்று திருக்கோவில் சார்பில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும் செய்து, 8 மணிக்கு தேரில் ஏற்றினர். 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் துவங்கியது. எம்.எல்.ஏ., மஸ்தான் வடம் பிடித்து உற்சவத்தை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.பி., ஏழுமலை, ஒன்றிய சேர்மன் விஜயகுமார், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். மாடவீதிகள் வழியாக தேர் பவனி வந்த போது பக்தர்கள் நாணயம், காய்கரிகள், தானியங்களை வாரி இறைத்து நேர்த்திகடன் செலுத்தினர். பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கினர். 8 ம் நாள் விழாவாக நாளை குதிரை வாகனத்திலும், 1ம் தேதி சந்திரபிரபை வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறையினர், கிராம பொதுமக்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; திருநள்ளார் சனீஸ்வர பவான் கோவில் பிரமோற்சவ விழாயொட்டி புஷ்பபல்லாக்கு வீதியுலா ... மேலும்
 
temple news
மேலூர்; திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு இன்று ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில், அஹோபிலவல்லி தாயார் உடனுறை பாடலாத்ரி ... மேலும்
 
temple news
சிவகங்கை; காளையார்கோவில் சோமேஸ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோவில் வைகாசி விசாகத் திருவிழா ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்;  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஏழு நாட்கள் நடைபெறும் வசந்த உத்சவம் கடந்த 24ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar