காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2025 11:06
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வணிகர் வீதி அருகில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் மூன்றாம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தி விழா நேற்று நடந்தது. இதில், காலை 7:00 மணிக்கு பத்ரகாளியம்மனுக்கு புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, ஊஞ்சல் சேவை உத்சவத்தில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி உற்சவர் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் பிரகாரத்தில் வீதியுலாவும், காஞ்சி ஜெயஸ்ரீ நாட்டியாலயா மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.