வீரட்டானேஸ்வரர் கோவிலில் வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2025 02:06
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் வைகாசி விசாக பெருவிழாவில் சுவாமி வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வைகாசி விசாக விழாவின் 10ம் நாளான நேற்று காலை மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் சுவாமி வெள்ளிக் காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி புறப்பாடாகி கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையினர் செய்திருந்தனர்.