கோவை; சித்தாபுதூர் வெங்கடசாமி ரோடில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 50ம் ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று அம்மனுக்கு சத்தி கிரகம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மூலவர் அம்மன் பத்ரகாளியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.