பதிவு செய்த நாள்
10
ஜூன்
2025
05:06
சென்னை; சென்னை, வேளச்சேரி, 4வது பிரதான சாலையில், மஹா பெரியவா அனுஷ பூஜா சமதியின், மஹா பெரியவா இல்லம் அமைந்துள்ளது. அங்கு, காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சுவாமிகளின், 132வது ஜெயந்தி மகோத்சவம் இன்று துவங்கியது. கணபதி சச்சிதானந்த சுவாமிகள் ஆருளாசியுடனும், உலக நன்மைக்காக இன்று காலை 6:00 மணி முதல் ருத்ராபிஷகேம், ருத்ர ஹோமம், கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், ஜயந்தி மகா சங்கல்பம், மஹான்யாசம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து சாம்ப பரமேஸ்வரர், மகா பெரியாளுக்கு, நல்லெண்ணெய், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால் தயிர், தேன், கரும்புசாறு, பழச்சாறு, இளநீர், சந்தனம் ஆகிய திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின், ருத்ரம் ஹோமம், வஸோர்தாரா ஹோமம், கலச அபிஷேகம், அலங்காரம் தீபாராதனைகள் நடந்தன. காலை 7:30 மணி முதல் லட்சார்ச்சனை, 108 சுஹாசினி பூஜைகள் நடந்தன.
பின், தம்பதி பூஜை, கன்யாபூஜை, வடுபூஜை, சப்த மாதா பூஜைகள் நடந்தன. மாலை லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை, பாராயணம், நாமசங்கீர்த்தனம் நடந்தது. மகோத்சவத்தின் இரண்டாம் நாளான நாளை காலை முதல் நாமசங்கீர்த்தனம், 108 பாகவதர்களுக்கு பூஜை, மஹா பெரியவருக்கு ருத்ராபிஷேகம், பாகவதர்கள் செய்யும் லட்சார்ச்சனை, 108 நாம சங்கீர்த்தன பாகவதர்களுக்கு சோடச உபசார பூஜை ஆகியவை நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை மஹா பெரியவா அனுஷ பூஜா சமிதியின் செய்துள்ளனர்.