Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேதபுரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்; ... கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்; புஷ்ப அலங்காரத்தில் சுவாமி கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாட் பூர்ணிமா; கணவனின் ஆயுள் அதிகரிக்க ஆல மரத்தில் கயிறு கட்டி பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
வாட் பூர்ணிமா; கணவனின் ஆயுள் அதிகரிக்க ஆல மரத்தில் கயிறு கட்டி பெண்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2025
11:06

வட மாநிலங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படும் வாட் சாவித்திரி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் தங்களின் மாங்கல்ய பாக்கியத்திற்காக ஆல மரத்தில் கயிறு கட்டி ஏராளமான திருமணமான பெண்கள் வழிபட்டனர்.

வட இந்திய பெண்கள் ஆண்டு தோறும் ‘வட் பூர்ணிமா’ திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். வட் பூர்ணிமா என்றால் ‘முழு நிலவு’ என்று பொருள்.  சாவித்திரி உயிர் இழந்த தன் கணவன் சத்யவானை இடைவிடாத நோன்பு மற்றும் இறை வேண்டலால் காப்பாற்றினாள். அதை நினைவுபடுத்தும் வகையிலும் வட் பூர்ணிமா திருவிழா கொண்டாடப்படுகிறது. பெண்கள் தங்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், அவர் நல்ல உடல் நலத்துடன் வாழவும் இறைவனை வழிபடுகின்றனர். திருவிழாவை முன்னிட்டு திருமணம் முடிந்த பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் அதிகரிக்க நேற்று உணவு ஏதும் உண்ணாமல் நோன்பு இருந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் தங்களை மணப்பெண்கள் போல அலங்கரித்து கொண்டு இறைவனை வேண்டி, ஆலமரத்தில் நூலை சுற்றினர். மேலும் ஒருவருக்கொருவர் குங்கும திலகமிட்டு வழிபட்டனர். இவ்வாறு ஆலமரத்தில் நூல் சுற்றினால் கணவன் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ்வார் என்பது ஐதீகம். விழாவானது மராட்டியம், குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா இன்று காலை விநாயகர் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பத்தூர்; சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள 108 திவ்ய ... மேலும்
 
temple news
சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வரபகவான் கோயில் முன் ஓடும் சுரபி நதிக் கரையில் பக்தர்கள் நேர்த்தி கடன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; விழுப்புரம் அருகே 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால கொற்றவை, மூத்த தேவி சிற்பங்கள் ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே கூத்தாண்டவர் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar