கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்; புஷ்ப அலங்காரத்தில் சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2025 11:06
கோவை; கோட்டைமேடு கரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாதம் கடைசி புதன்கிழமை மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் உற்சவர் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.