அருப்புக்கோட்டை வேணுகோபாலசாமி கோயிலில் தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2025 12:06
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி வேணுகோபாலசாமி கோயில் தேரோட்டம் நடந்தது. பாலையம்பட்டியில் உள்ள வேணுகோபாலசாமி கோயில் வைகாசி வசந்த விழா ஜூன் 2ல் கொடியேற்றத்துடன் நடந்தது. தினமும் சாமி ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் ஜூன் 6 நடந்தது. நேற்று மாலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. முக்கிய வீதிகளின் வழியாக தேர் ஊர்வலமாக வந்தது. வேணுகோபாலசாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.